Published : 03 Apr 2022 04:15 AM
Last Updated : 03 Apr 2022 04:15 AM

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்

மதுரை: தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதன்படி தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13 (புதன் கிழமை) அன்று இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06006 நாகர்கோவிலில் இருந்து ஏப்.17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x