Published : 03 Apr 2016 09:52 AM
Last Updated : 03 Apr 2016 09:52 AM

காமராஜரின் சகோதரர் பேத்தி திமுகவில் இணைந்தார்

காமராஜர் சகோதரரின் பேத்தி மயூரி கண்ணன், திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்த மயூரி, முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இவர், காமராஜரின் சித்தப்பா மகன் அண்ணாமலை நாடாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மயூரியின் தந்தை ராஜாமணி, தாய் சந்திரா, கணவர் கண்ணன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மயூரி கண்ணன், ‘‘சுமார் ஓராண்டு பாஜகவில் இருந்தேன். அங்கு உறுப்பினர் சேர்க்கை என கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டேன். பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சம வாய்ப்புகளைத் தரும் கட்சி திமுகதான். காமராஜர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியின் நிறைவேற்றப்பட்டன. எனவே, நாங்கள் குடும்பத்துடன் திமுகவில் இணைந்தோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x