Published : 13 Apr 2016 09:11 AM
Last Updated : 13 Apr 2016 09:11 AM
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ போட்டியிடும் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: மதுரை காளவாசல், கோரிப்பாளையம் வரை அமைக்கப்படும் பாலத்துக்கு வரைபடம் தயாரித்து நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு ரூ.162 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடக்கவே இல்லை என மக்களை ஏமாற்ற கருணாநிதி அறிக்கை விடுகிறார்.
பயிர் கடன் ரத்து செய்யப்படும் என கருணாநிதி சொல்லி உள்ளார். தகுதியில்லாதவர்களுக்கு திமுக ஆட்சியில் போலி கடன் கொடுத்தனர். அதனால், அந்த கடனை வசூல் செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியில் எந்த கடனும் வாராக்கடன் இல்லை. கருணாநிதி எந்த கடனை தள்ளுபடி செய்ய போகிறார். நமக்கு ஒரே எதிரி கருணாநிதிதான். மற்ற கட்சிகள் பற்றி கவலையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT