Published : 03 Apr 2016 09:54 AM
Last Updated : 03 Apr 2016 09:54 AM
அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்று பாமக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ், கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ‘டிஸ் ஏண்டானா’ சின்னத்தை கோவையில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘அடுத்த வாரம் நடைபெறும் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பாமகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும். கொஜக 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மக்களிடம் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாமக ஆட்சியமைக்க கொஜக உறுதுணையாக இருக்கும்’ என்றார். பாமகவுடன் கூட்டு சேர்ந்த முதல் கட்சி கொங்குநாடு ஜனநாயகக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT