Published : 03 Apr 2016 10:04 AM
Last Updated : 03 Apr 2016 10:04 AM
திமுக கூட்டணிக்கு மேலும் 11 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதுவரை 200-க்கும் அதிகமான அமைப்புகளின் நிர்வாகிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்துள்ளனர்.
அதன்தொடர்ச்சியாக தமிழர் பாரதம், பூவை மூர்த்தியார் மக்கள் பேரவை, தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவை, சமூக விழிப்புணர்வு இயக்கம், திருவொற்றியூர் அனைத்து முதலியார் இளைஞர் பொதுநலச் சங்கம், கிராம துப்புரவுப் பணியாளர் பேரவை உள்ளிட்ட 11 அமைப்புகளின் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை அளித்தனர்.
திமுக கூட்டணி வெற்றிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பாடுபடும் என அதன் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கான ஆதரவை அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT