Published : 18 Apr 2016 07:52 AM
Last Updated : 18 Apr 2016 07:52 AM

வாரணவாசியில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம்

முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தை அடுத்த வாரணவாசியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

சென்னை தீவுத் திடலில் நடை பெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, இன்று 5-வது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசு கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை யில் வாரணவாசி பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட் டத்துக்கான இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக, கூட்டம் நடைபெற உள்ள பகுதிக்கு அருகே ஹெலி பேட் மைதானம் அமைக்கப்பட் டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 18 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற் கொள்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண் டர்கள் வருவர் என்பதால், அவர்களுக்கு போதுமான அள வுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை ஏற்பாடு செய் துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x