Published : 29 Apr 2016 09:11 AM
Last Updated : 29 Apr 2016 09:11 AM
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மே 6-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மே 6-ம் தேதி ஓசூர், சென்னை யிலும் 8-ம் தேதி வேதாரண் யம், கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
சென்னை மாநகர், புறநகர் தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 6-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
திருச்செங்கோடு, ராசிபுரம், கெங்கவல்லி, வாழப்பாடி ஆகிய தொகுதிகளில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று பிரச் சாரம் செய்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாளை (30-ம் தேதி) சென்னை தியாகராய நகர், விருகம்பாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதி களில் மத்திய அமைச்சர்கள் வெங் கய்ய நாயுடு, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் மே 4-ல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள இருப்பதாக எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT