Published : 06 Apr 2016 09:36 AM
Last Updated : 06 Apr 2016 09:36 AM
மனிதநேய ஜனநாயகக் கட்சிப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது, எந்தக் கட்சியும் செய்யாத சாதனையாகும். இத்தேர்தலில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
அதிமுக ஆட்சியில், மத கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாதி, சமூகப் பதட்டம் தணிந்திருக்கிறது. இதுகுறித்து அனைத்து பள்ளிவாசல்கள், தேவாலய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதுவோம். கட்சியின் தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் புதன்கிழமை நடக்கிறது. இதில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றார் தமிமுன் அன்சாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT