Published : 18 Apr 2016 08:22 AM
Last Updated : 18 Apr 2016 08:22 AM

கரை வேட்டிக்கு காப்புரிமையா? - தேமுதிகவுக்கு சந்திரகுமார் கேள்வி

தேமுதிக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தேமுதிகவில் இருந்து நீக்கப் பட்டுள்ள சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தி வருகின்றனர். விஜயகாந்த் படம், கட்சிக் கொடி, கரை வேட்டியை அவர்கள் பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

இதுகுறித்து மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தேமுதிக கொடி, சின்னத்தை யும் நாங்கள் முடக்கப் போகிறோம் என்று ஆரம்பத்தில் கூறினர். அப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் கிடையாது. இப்போது விஜய காந்த் படத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். நாங்கள் தனி இயக்கத்தை தொடங்கிவிட்டோம். அதன்பிறகு விஜயகாந்த் படத்தை பயன்படுத்த நாங்கள் முட்டாள்கள் இல்லை.

கருப்பு, மஞ்சள், சிவப்பு வண்ண கரை வேட்டிக்கு தேமுதிக காப்புரிமை ஏதும் வாங்கவில்லை. அதே கரை வேட்டியைத்தான் புதிய நீதிக்கட்சி, லட்சிய திமுக போன்றவை பயன்படுத்துகின்றன. எனவே கருப்பு, மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட கரை வேட்டி கட்டுவதை நாங்கள் விடமுடியாது. அதற்கான காப்புரிமையை தேமுதிக காட்டி னால் அந்த வேட்டியை நாங்கள் கட்ட மாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x