Published : 09 Apr 2016 03:09 PM
Last Updated : 09 Apr 2016 03:09 PM

திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் மீது அதிருப்தி: கட்சி தலைமைக்கு அனுப்பப்படும் புகாரால் சிக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல், உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் நீதிபதி மீது அக்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்து கட்சித் தலைமைக்கு நிர்வாகிகள் புகார் அனுப்பிய வண்ணம் உள்ளதால் வேட்பாளர்கள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருப்ப ரங்குன்றம் தொகுதியில் கடந்தமுறை அதிமுக போட் டியிடவில்லை. கூட்டணிக் கட்சி யான தேமுதிக சார்பில் ஏ.கே.டி.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறை இத்தொகுதியில் அதிமுக நேரடியாக களம் இறங்கத் திட்டமிட்டது. இந்த தொகுதியில் போட்டியிட மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, கடந்த ஒரு ஆண்டாக திரைமறைவில் முயற்சி செய்து வந்தார். இவரது வீடு பசுமலையில் உள்ளது. மாநகர் பகுதியில் நின்றால் வெற்றி பெறுவது சிரமம் என்பதால், சொந்தத் தொகுதியான புறநகருக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் நிற்கவே விரும்பினார். புறநகர் மாவட்டச் செயலாளராகவும் இவர் இருந்ததால் இவருக்கே இந்த தொகுதி கிடைக்க வாய்ப்பு இருந்தது.

இந் நிலையில் அதிமுக வேட் பாளர் பட்டியலில் ஆரம்பத்தில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா பெயர் இடம் பெறவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ சீனிவேல் அறிவிக்கப்பட்டார். அதனால், மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் அதிர்ச்சியடைந்தார். அதன்பின், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்எஸ்.பாண்டியனுக்குப் பதிலாக திடீரென்று மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சீட் கிடைக்காத கவலையைவிட மதுரை வடக்கு தொகுதியாவது கிடைத்ததே என மேயர் தரப்பினர் திருப்தி அடைந்தனர். தற்போது திமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியி டுவதால், மேயர் தரப்பினர் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந் நிலையில், திருப்பரங் குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சீனிவேல் மீது அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சீனிவேல், கடைசியாக 2001-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பின் அவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்காததால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதேபோல், உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள நீதிபதி மீதும், அப்பகுதி அதிமுகவினர் அதி ருப்தி அடைந்துள்ளதாகக் கூறப் படுகிறது. அவர் மீது கட்சித் தலைமைக்கு நிர்வாகிகள் புகார் அனுப்பி வருகின்றனர்.

அதனால் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதி வேட் பாளர்கள் மாற்றப்படலாம் என கட்சியினர் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x