வண்டலூரில் வெள்ளை புலி உயிரிழப்பு

வண்டலூரில் வெள்ளை புலி உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் 9 புலிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றில் 13 வயதுடைய பெண் புலி உடல்நலக் குறைவால் கடந்த 23-ம் தேதி இரவு உயிரிழந்தது.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``இந்தப் புலி கடந்த சில வாரங்களாக அடாக்சியா என்ற கால் தசை பாதிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது. கடந்த இரு நாட்களாக உணவு எதுவும் உண்ணவில்லை. இதனால் உடல் அசைவின்றிக் கிடந்தது. இந்நிலையில் 23-ம் தேதி இரவு உயிரிழந்துள்ளது.

பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் அதன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர்கள் மூலம் புலியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in