Published : 11 Apr 2016 04:16 PM
Last Updated : 11 Apr 2016 04:16 PM

தமிழகத்தில் அடுத்த மாதம் மோடி பிரச்சாரம்: தமிழிசை தகவல்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி அடுத்த மாதம் (மே) பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர்கள் 20 பேர் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த அவர் எந்த தேதி போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் கலந்து கொண்ட அந்த பொதுக்கூட்டம் பாஜகவின் தேர்தலுக்கு முந்தைய பிரச்சார கூட்டம் என பேசப்பட்டாலும் அப்போது பிரதமர் மோடி தமிழக தேர்தல் குறித்து ஏதும் பேசவில்லை. பாஜகவின் சாதனைகளை மட்டுமே விளக்கிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x