Published : 22 Apr 2016 10:13 AM
Last Updated : 22 Apr 2016 10:13 AM

வைகோ பிரச்சார பயணத்தில் மாற்றம்

மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமு திக தலைவர் விஜயகாந்த், வரும் 27-ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதனால் அன்றைய தினம், மதிமுக பொதுச்செயலர் வைகோ, உளுந்தூர்பேட்டை தொகுதியில் செய்யவிருந்த பிரச்சார பயணம், ஏப்ரல் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 24-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை உளுந்தூர்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மாலை 6 மணிக்கு மேல் விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஏப்ரல் 24-ம் தேதி அரவக்குறிச்சி, பல்லடம், தாராபுரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் வைகோ பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அந்த தொகுதிகளில் பிரச்சாரம் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x