Published : 13 Apr 2016 08:43 AM
Last Updated : 13 Apr 2016 08:43 AM
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. அவற்றின் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு 8.56 மணிக்கு அனல்மின் நிலையத் தின் 4-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென துளை விழுந் தது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலையப் பொறியாளர் கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT