Published : 20 Mar 2022 04:15 AM
Last Updated : 20 Mar 2022 04:15 AM

வானூர் அருகே பெரியகொழுவாரியில் புதிய சமத்துவபுரம்: ஏப்ரல் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

வானூர் அருகே பெரியகொழுவாரி கிராமத்தில் ஏப்ரல் 5-ம் தேதி பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொழுவாரி கிராமத் தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்து வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 5- ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். இதனை முன் னிட்டு பெரியகொழுவாரியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தினை நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண் டார். பின்னர் அவர் கூறியது:

பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இவை களை பயனாளிகளுக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி,விளையாட்டுத்திடல், பொது விநியோக கடை, மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை விரைந்துமுடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திட்ட இயக்குநர் சங்கர், மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x