Published : 19 Mar 2022 04:25 AM
Last Updated : 19 Mar 2022 04:25 AM

தஞ்சாவூரில் இன்று முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா இன்று (மார்ச் 19) முதல் 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சசிகலா, நேற்று யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். தனது இல்லத்தில் இன்று (மார்ச் 19) முதல் மார்ச் 21-ம் தேதி தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

நாளை (மார்ச் 20) சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி, தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள ம.நடராஜனின் நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்த உள்ளார் என சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x