Published : 14 Apr 2016 04:54 PM
Last Updated : 14 Apr 2016 04:54 PM

அதிமுக வேட்பாளருக்கு எதிராக பெரம்பலூரில் போஸ்டர் போராட்டம்

பெரம்பலூர் (தனி) தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ ரா.தமிழ்செல்வன், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றக் கோரி கட்சியினர் சிலர், பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் மனு அளித்துள்ள நிலையில், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

“தொகுதி மக்களை மதிக்கத் தெரியாதவர் வேட்பாளரா?, 5 ஆண்டுகள் சுருட்டியது போதும். அஇஅதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா அவர்களே, களை எடுங்கள். வெற்றி நிச்சயம்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள், அந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x