Published : 30 Apr 2016 08:23 AM
Last Updated : 30 Apr 2016 08:23 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.272 உயர்வு: மீண்டும் ரூ.22,700-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 712-க்கு விற்பனையானது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றம், தங்கத்தில் செய்யப்படும் முதலீடு, பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் ஆகிய காரணங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்நிலையில், அட்சயதிருதி யை வரும் மே 9-ம் தேதி வருவதால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 712-க்கு விற்ப னையானது. ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 839-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 805-க்கு விற்கப்பட்டது. 24 மாதங்களுக்கு பிறகு தங்கம் ஒரு பவுன் விலை ரூ.22 ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘விரைவில் அட்சயதிருதியை வர வுள்ளதால் நகைக் கடைகளில் மக்கள் அதிகமாக வரத் தொடங் கியுள்ளனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. சர்வ தேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் குறைய வாய்ப் புள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x