Published : 17 Apr 2016 10:28 AM
Last Updated : 17 Apr 2016 10:28 AM
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் ஊழல் அதிகரித்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல், ஊழல் அரசுக்கும் ஊழலற்ற நேர்மையான அரசுக்கும் நடைபெறுகின்ற போட்டி, என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரு மான பிரகாஷ் ஜவடேகர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா அரசு மக்களுக்கான எந்த திட்டத்தை யும் நிறைவேற்றவில்லை. ஈரோட் டில் மக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளைகூட நிறைவேற்ற வில்லை. காங்கேயம் காளை களை பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள 23 கோடி ரூபாயில் தமிழக அரசு ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. ஈரோடு பழனி ரயில் திட்டத்துக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் ஆரோக்கிய பானங் கள் தயாரிக்க முயற்சி செய்யாத தமிழக அரசு மலேசிய விவ சாயிகளுக்கு மானியம் அளித்து பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. இதனால் வரும் தேர்தலில் ஜெயலலிதா மலே சியா சென்றுதான் ஓட்டு கேட்க வேண்டும். கரும்பு விவசாயி களை பாதுகாக்கும் வகையில் எத்தனால் தயாரிக்காமல் மது ஆலைகளுக்கான மூலப் பொருளை மட்டும் தயாரிக்கப் படுகிறது. மதுவால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆறுகளில் மணல் ஆளும் கட்சியினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் ஊழல் அதிகரித் துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் ஊழல் அரசுக்கும் ஊழலற்ற நேர்மையான அரசுக்கும் நடை பெறுகின்ற போட்டி என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT