Published : 30 Apr 2016 09:09 AM
Last Updated : 30 Apr 2016 09:09 AM

திறமையான அதிகாரிகள் பலர் இருந்தும் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன: முத்தரசன் குற்றச்சாட்டு

`திறமையான அதிகாரிகள் இருந்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் திறமை பளிச்சிட வில்லை. தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நேற்று கடலூர் வந்த முத்தரசன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்ரேசன் சக்சஸ்; ஆனால் நோயாளி நிலைமை மோசம் இந்த நிலையில்தான் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு உள்ளது. ஆணையத்தில் திறமையான அதி காரிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் கைகள் கட்டப்பட் டுள்ளன. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்பதை ஏன் தீவிரமாக வலியுறுத்தவே இல்லை? கரூரில் பிடிபட்ட பணம் எவ்வளவு என்பதை ஏன் தெரிவிக்கவில்லை? குடோனில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருந்த அதிமுக பிரமுகர் அன்புநாதன் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை? தமிழக காவல்துறை அவ்வளவு திறமையில்லாததா? மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் தமிழக அரசுக்கும் உறவு உள்ள தால்தான் அனைத்தையும் மீறி பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்று கூறினார். முன்னதாக தமாகா சந்திரசேகர் கடலூர் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x