Published : 28 Apr 2016 08:20 AM
Last Updated : 28 Apr 2016 08:20 AM

எழும்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்

சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் பாமக வேட்பாளர் நேற்று திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் எம்.கீதாமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது. அவர் நேற்று (ஏப். 27) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால், திடீரென அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளராக ஏ.ராஜேந்திரனை அக்கட்சி அறிவித்தது. அதையடுத்து எழும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சங்கீதாவிடம் நேற்று ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து கீதாமணியிடம் விசாரித்தபோது, “எனக்கு உடல்நிலை சரியில்லாததால், தேர்தலில் போட்டியிட இயலவில்லை என்று கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். அதன்பிறகுதான்எழும்பூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x