Published : 15 Mar 2022 10:23 AM
Last Updated : 15 Mar 2022 10:23 AM

விழுப்புரம் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.1.31 கோடி என்ன ஆனது?

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரம் நகராட்சியில் தற்போது 128 தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகிறோம். எங்களது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ. 1 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரத்து 344- ஐ கூட்டுறவு கடன் தொகைக்கான தவணையாக செலுத்தவில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x