Published : 17 Apr 2016 09:10 AM
Last Updated : 17 Apr 2016 09:10 AM
கொடுங்கையூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, “அரசியலுக்கு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்தை போல நான் பயப்படவில்லை” என்று பேசினார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் விஜயகாந்த்துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் காலனியில் நேற்று மாலையில் ஒன்று கூடிய ரஜினி ரசிகர்கள் விஜயகாந்த்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் உருவ பொம்மையை நடு ரோட்டில் போட்டு தீயிட்டு கொளுத்தினர்.
கொடுங்கையூர் போலீஸார் விரைந்து வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த பொம்மையை அணைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT