Published : 12 Apr 2016 04:23 PM
Last Updated : 12 Apr 2016 04:23 PM
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சார பயண பட்டியலை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டது.
அந்தப் பட்டியலில் ஏப்ரல் 25-ம் தேதியன்று திருவாரூரில் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மாலை அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், கருணாநிதியின் பிரச்சார பயணத்திட்டத்தில் திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் அவர் அங்கு போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக கருதப்படுகிறது. 2-வது முறையாக திருவாரூர் தொகுதியில் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
93 வயதில் 13-வது முறையாக கருணாநிதி தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதி 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் கருணாநிதி போட்டியிடும் தொகுதியை அக்கட்சி அறிவித்துள்ளது.
ஏப்ரல் 23-ல் சென்னை சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை துவக்கும் கருணாநிதி தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு நகரங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சென்னை, ஈரோடு, வேலூர், மதுரை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். பார்க்க > >கருணாநிதியின் பிரச்சாரம் பயணத் திட்ட விவரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT