Published : 11 Mar 2022 04:15 AM
Last Updated : 11 Mar 2022 04:15 AM

உத்தராகண்ட், உ.பி-யில் சிறுபான்மையினர் வாக்கு பாஜகவுக்கு கிடைத்துள்ளது: அர்ஜூன் சம்பத்

உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநில தேர்தலில் சிறுபான்மை மக்கள் பாஜக-வுக்கு வாக்கு அளித்துள்ளனர் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட வெறுப்பு பரப்புரைக்கு பதிலடியாக பாஜக-வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செயல்பட்டது. சாதி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநில தேர்தலில் சிறுபான்மை மக்கள் பாஜக-வுக்கு வாக்கு அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை நம்பி திமுக வீணாக போகிறது. மொழி, இனவாத பிரிவினையை திமுக ஆதரிக்கக் கூடாது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும். தமிழகத்தில் கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் சாதி பிரச்சினை, மதவாதம், பயங்கரவாதம் மற்றும் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலை தொடர்ந்தால் சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். திராவிடத் திணிப்பு தொடர்ந்து இருக்குமானால் நாடு முழுவதும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படைக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x