'திமுகவின் துரோகத்திற்கு மருந்தாக உச்ச நீதிமன்ற உத்தரவு' - பேரறிவாளன் ஜாமீன் குறித்து தினகரன் கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத் தொடர்ந்து எஞ்சிய ஆறு பேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

'பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக் கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்' என்று கூறி மக்களை ஏமாற்றிய திமுக, அவர்கள் இனி எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது.

திமுக-வின் இந்த துரோகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை" என தினகரன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in