Published : 24 Apr 2016 10:38 AM
Last Updated : 24 Apr 2016 10:38 AM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகள் சித்ராசெல்வி போட்டியிடுகிறார். இதில், திமுகவினர் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியினரை அழைத்து இணக் கமாக தேர்தல் வேலை பார்க்காமல் புறக்கணிப்பதாகவும், அலட்சியம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவின் மாவட்ட அமைப்பாளர் அகரம் ஆறுமுகம், திமுகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட முடி வெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘கூட்டணிக் கட்சியான எங்களை திமுகவினர் திட்டமிட்டே அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கு தொகுதியில் செல்வாக்கில்லை என அவமதிக்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றது. தற்போதைய சூழலில் இந்த வாக்குகள் திமுகவை வெற்றிபெறச் செய்யும். ஆனால், எங்களை புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் தலைமையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். கூட்டணிக் கட்சியினர் அழைத்துப் பேசாவிட்டால் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT