Published : 28 Apr 2016 07:59 AM
Last Updated : 28 Apr 2016 07:59 AM

எங்களை நிம்மதியாக வியாபாரம் செய்யவிடுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு நகை வியாபாரிகள் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் ஒரு நகைக் கடையில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில், 2.5 கிலோ மதிப்புள்ள மூக்குத்தி, தோடு போன்றவை கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், கோவை நகை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட மனு: இந்திய அளவில் கோவை நகை தயாரிப்பில் 3-வது இடத்தில் உள்ளது.

முரளி என்பவர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. அரைமணி நேரத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அரசியல் செயல்பாட்டுக்கானது அல்ல என தெரிந்தும் 11 மணி நேரம் சோதனை என்ற பெயரில் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.

இது தங்க வியாபாரிகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிமுறைக்கு மாறாக எந்த சம்பவம் நடந்தாலும் தகவல் தருவோம் என உறுதியளித்துள்ளோம். எனவே, சோதனை என்ற பெயரில் வியாபாரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளன நிர்வாகி உம்மிடி உதயகுமார் அளித்த மனுவில், அரசியல்வாதிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் கண்காணியுங்கள். வியாபாரி களை வியாபாரம் செய்து வாழ விடுங்கள்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x