Published : 23 Apr 2016 07:54 AM
Last Updated : 23 Apr 2016 07:54 AM
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே சென்னம்பட்டி தெற்குத் தெருவில் தனக்காயி அம்மன் கோயில் உள்ளது. புதிதாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலில் வழிபட்டால், “நல்லது நடக்கும்” என்று சமயபுரத்தைச் சேர்ந்த, விஜயகாந்தின் குடும்ப அர்ச்சகர் பிரேமலதாவிடம் தெரிவித்தாராம்.
இந்நிலையில், விராலிமலையில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த பின்னர் திருச்சியில் தங்கியிருந்த பிரேமலதா, காரில் தனது உதவியாளர்களுடன் சென்னம்பட்டிக்கு இரவு நேரத்தில் வந்துள்ளார். தனக்காயி அம்மனை வழிபட்ட பின்னர், சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சி சென்றுள்ளார்.
அவர் வரும் தகவல் கட்சி நிர்வாகிகளுக்குக் கூட தெரிவிக்கப்படவில்லையாம். பிரேமலதா ரகசியமாக இக்கோயி லுக்கு வந்து வழிபட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT