Published : 12 Apr 2016 09:12 PM
Last Updated : 12 Apr 2016 09:12 PM

மக்கள் தேமுதிக போட்டியிடும் 3 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் படி அக்கட்சி 3 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

இதில் மக்கள் தேமுதிக-வுக்கு ஈரோடு கிழக்கு, கும்மிடிப் பூண்டி, மேட்டூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்திரகுமார், மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சி.எச்.சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து தங்கள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சந்திரகுமார் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x