Published : 12 Apr 2016 08:31 AM
Last Updated : 12 Apr 2016 08:31 AM
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி யில் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலிம் போட்டியிட சீட் வழங்காததால் பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலிம், செப்டம்பர் மாதம் 28-ம் தேதி டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட ஷேக் சலிம் விருப்ப மனு அளித்தார். இந்நிலையில், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக துரை கண்ணனின் பெயர் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தொண்டர்கள் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி பதவிகளிலும், பல்வேறு அமைப்புகளிலும் பெருவாரி யாக முஸ்லிம்கள் பதவி வகிக் கின்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகு திகளில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியும் ஒன்று. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட குப்புராம் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 51,479 வாக்குகள் பெற்றார். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஷேக் சலிமை நிறுத்தியிருந்தால் வெற்றி பெறுவதுடன், பாஜக வுக்கு சிறுபான்மையின மக்க ளின் நல்லெண்ணமும் கிடைத் திருக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT