Published : 06 Mar 2022 09:34 AM
Last Updated : 06 Mar 2022 09:34 AM

மதுரை-சென்னை வைகை விரைவு ரயில் 6.40 மணி நேரத்தில் பயணித்து 44 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

மதுரை

தென்னக ரயில்வேயில் மதுரை-சென்னை வைகை விரைவு ரயில்சேவை 15.8.1977 தொடங்கப்பட்டது. மதுரை-சென்னை இடையிலான 497 கி.மீ. தூரத்தை 7 மணி 5 நிமிடத்தில் சென்றடைந்தது சாதனையாக இருந்தது. மதுரையில் இருந்து காலை 7.05-க்கு புறப்படும் ரயில் மதியம் 2.20-க்குசென்னையை சென்றடைய வழக்கமாக 7 மணி 15 நிமிடங்கள் ஆகும்.

ஆனால் மார்ச் 3-ல் வைகை ரயில் சில தொழில்நுட்பக்கோளாறால் மதுரையிலிருந்து 21 நிமிடம் தாமதமாக புறப்பட்டபோதும், 6 மணி 40 நிமிடங்களில் சென்னையை சென்றடைந்ததில் 44 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுநர் ரவிசங்கர்

இதுகுறித்து ரயில் ஓட்டுநர் ரவிசங்கர் கூறும்போது, மதுரையிலிருந்து கடந்த 3-ம் தேதி 21 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டது. நானும் ஓட்டுநர் குபேந்திரனும் ரயில் மேலாளர், சிக்னல் கட்டுப்பாட்டாளர்கள் உதவியுடன் 110 கி.மீ. வேகத்தில் 7 நிலையங்களில் நிறுத்தி விழுப்புரத்துக்கு 11.37 மணிக்கு (வழக்கமாக 11.40 மணி) சென்றுவிட்டோம். அங்கிருந்து சென்னையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்கள் திறமையாக செயல்பட்டு மதியம் 2.07-க்கு சென்னையை சென்றடைந்தனர். இதன் மூலம் வழக்கமான நேரத்தைவிட தாமதமாக புறப்பட்டும் முன்கூட்டியே ரயில் சென்றுள்ளது. அனைவரின் ஒத்துழைப்போடு 44 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x