”புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா?” - தினகரன் கேள்வி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "எல்லாவற்றையும் போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, தற்போது அந்தக் கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?

எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல திமுக அரசு நாடகமாடக்கூடாது.

புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in