Last Updated : 02 Mar, 2022 11:06 AM

 

Published : 02 Mar 2022 11:06 AM
Last Updated : 02 Mar 2022 11:06 AM

அரியலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு

அரியலூர் நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி் அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இன்று (மார்ச் 02) காலை பதவியேற்றுக் கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி 18, ஜெயங்கொண்டம் நகராட்சி 21, உடையார்பாளையம் மற்றும் வரதராஜன் பேட்டை தலா 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம்19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நகராட்சி ஆணையர் சித்ரசோனியா, உறுதிமொழியை வாசிக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றனர். முதலில் திமுக, அதன் கூட்டணி மற்றும் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களும் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சுபாஷினி, உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல் உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி்அலுவலகங்களில் அந்தந்ந பேரூராட்சி ஆணையர்கள் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x