Published : 24 Apr 2016 10:24 AM
Last Updated : 24 Apr 2016 10:24 AM
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் 2-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். கடந்த 2011 தேர்தலில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி கடும் போட்டியை ஏற்படுத்தினார். இந்த போட்டியை சமாளிக்க ஸ்டாலின் மனைவி துர்கா தனது உறவினர்கள், கட்சியினருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். பெண்கள், அரசு ஊழியர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அதேபோல இந்த முறையும் கணவருக்காக தீவிர பிரச்சாரத் தில் இறங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின். முதல்கட்டமாக கொளத்தூர் தொகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 4 நாட் களாக கொளத்தூர், பெரவள்ளூர், செந்தில் நகர், சீனிவாச நகர், பெரியார் நகர், அயனாவரம், பூம்புகார் நகர், ஜவகர் நகர், செம்பியம் ஆகிய பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கம், பெண்கள் சங்கங்களின் நிர்வாகி களை சந்தித்து ஸ்டாலினுக் காக வாக்களிப்பதுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
இது தொடர்பாக தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘30 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற வேண்டும் என கட்சியினருக்கு ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். கொளத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 15 நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் மனைவி திட்டமிட்டுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT