Published : 01 Mar 2022 09:37 AM
Last Updated : 01 Mar 2022 09:37 AM

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மாலை உருவானது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து 3 நாட்களில் இலங்கை கரையை நெருங்கும். இதனால் 2-ம் தேதி பரவலாக மிதமான மழை பெய்யும்.

3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 4-ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x