Published : 01 Mar 2022 07:37 AM
Last Updated : 01 Mar 2022 07:37 AM

மதுரை இளைஞர் மரணத்தில் போலீஸ் மீது நடவடிக்கை கோரி வழக்கு: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரையில் விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரி ழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த ஜெயா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் முத்துகார்த்திக்கை எஸ்.எஸ்.காலனி போலீஸார் திருட்டு வழக்கு விசாரணைக்காக 2019-ல் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு என் மகனை போலீஸார் கடுமையாக தாக்கி பொய் வழக்கு பதிவு செய்தனர்.

காயம் காரணமாக என் மகனை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னளிக்காமல் 2019-ம் ஆண்டு ஜன. 24-ல் கார்த்திக் இறந்தார்.

என் மகன் இறப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரித்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் உட்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் உட்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், என் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். பின்னர் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x