Published : 19 Apr 2016 08:40 AM
Last Updated : 19 Apr 2016 08:40 AM

மக்களை தெருக்கோடியில் நிறுத்திய அதிமுக, திமுக: விஜயகாந்த் குற்றச்சாட்டு

கோடிக்கணக்கான திட்டங்கள் என்று கூறி அதிமுகவும் திமுக வும் மக்களை தெருக்கோடி யில் நிறுத்திவிட்டன என தேமு திக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடை பெற்ற தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர்களை ஆத ரித்து அந்த கட்சியின் தலை வர் விஜயகாந்த் பேசும்போது, ‘எங்கள் 6 பேருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. ஒருவர் தவறு செய்தாலும், மற்ற 5 பேர் திருத்துவார்கள். அய்யா என்றால் மூப்பனார் மட்டும்தான், அந்த சொல் வேறு யாருக்கும் பொருந்தாது. 234 சட்டப்பேரவைத் தொகுதிக ளிலும் இரட்டை இலை சின் னத்தில் நிற்பதாகக் கூறி மிரட்ட நினைக்கின்றனர். தேர்தல் முடிவு அவர்களுக்கு எதிராக அமையப்போகிறது. தேமு திக தொண்டர்கள் உழைத்து 6 கட்சிகளைச் சேர்ந்த வேட் பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திமுக,அதிமுகவினர் அவர் களது தவறுகளை பிரச்சாரம் செய்கின்றனர். கோடிக்கணக் கான திட்டங்கள் என்று கூறி மக்களை தெருக்கோடியில் நிறுத்திவிட்டார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x