Published : 19 Apr 2016 08:46 AM
Last Updated : 19 Apr 2016 08:46 AM

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் புதுகையில் சுயேச்சையாக போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி அருகேயுள்ள கிருஷ்ணம் பட்டியைச் சேர்ந்தவர் எம்.சொக்க லிங்கம்(49). கருப்பட்டிபட்டி ஊராட்சித் தலைவரான இவர், அதிமுகவில் 10 ஆண்டுகள் ஒன்றியச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி கெங்கையம்மாள். அதிமுக பிரமுகரான இவர், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சதித்தபோது ஜாதியை சொல்லி அமைச்சர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர் மீது நட வடிக்கை எடுக்க கோரி உறவினர் களும் முத்தரையர் சங்கத்தினரும் 2015 நவம்பர் 5-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சொக்கலிங்கம், கெங்கையம் மாள் ஆகிய இருவரும் அதிமுக விலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், எம்.சொக்க லிங்கம் புதுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல், எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததால், எங்கள் சமூகத்தினர் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், இந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுகிறேன். இதேபோல, விராலிமலையில் விஜயபாஸ்கருக்கு எதிராக சமூகத்தினர் சார்பில் வீராச்சாமி நிறுத்தப்பட்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x