Published : 26 Feb 2022 08:18 AM
Last Updated : 26 Feb 2022 08:18 AM

‘கலாமை கொண்டாடுவோம்’ - ஆன்லைன் கலந்துரையாடல்: நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நாளை (ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

நாளைய இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல் கலாம். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, திருச்சி தேசிய தொழில்நுட்பநிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு கோவையைச் சேர்ந்த மாக் (MAK) இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவர்கள் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x