Published : 24 Feb 2022 04:12 PM
Last Updated : 24 Feb 2022 04:12 PM

போருக்கு நடுவே தவிக்கும் இந்திய மாணவர்கள்: மீட்க நடவடிக்கை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: போருக்கு நடுவே உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு மீட்க நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ரஷ்ய விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பெய்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பே அங்குள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துவந்திருக்க வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கை ஒரு சில நாட்களுக்கு முன் தான் தொடங்கியதால் சில நூறு இந்தியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்பட வேண்டும். மாற்று வழிகளை ஆராய்ந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x