Published : 24 Feb 2022 06:00 AM
Last Updated : 24 Feb 2022 06:00 AM

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் அவகாசம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது நடைபெற்ற கலவரத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதை முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு அமைத் தது.

2018 ஜூன் 4-ம் தேதி விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாதகாலஅவகாசம், பின்னர் 6 மாதமாகநீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால அறிக்கை தாக்கல்

இந்நிலையில், கடந்த ஆண்டுமே 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை யின் இடைக்கால அறிக்கையை ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

ஆணையத்தின் காலஅவகாசம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதங்கள் காலஅவகாசம்நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 22-ம் வரை காலஅவகாசம் வழங்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x