Published : 26 Apr 2016 09:13 AM
Last Updated : 26 Apr 2016 09:13 AM

வேட்பாளர்கள் தகவல்களை பதிவு செய்வதில் தாமதம்: பொதுமக்கள் அறிந்து கொள்வதில் சிரமம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தினசரி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் விவரங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய் யப்படும். அவர்கள் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை மட்டும் அடுத்த 24 மணி நேரத்துக் குள் இணையதளத்தில் கிடைக் கும் என, தேர்தல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், வேட்புமனு தாக்கல் தொடங்கியதும், நிலைமை தலைகீழாக இருந்தது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் குறித்த அடிப்படை தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். அதன் பின், அவர்கள் பிரமாணப் பத்திரத்தை ‘ஸ்கேன்’ செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், பெரும்பாலான தேர்தல் அலுவலர்கள் வேட்புமனு தாக்கல் மாலை 3 மணிக்கு முடிந்த பின்னரும், வேட்பாளர்களின் அடிப் படை தகவல்களை பதிவேற்றம் செய்யவில்லை. அத்துடன், பிர மாணப் பத்திரங்களையும் பதிவேற் றம் செய்வதில் தாமதம் செய்தனர். இதனால், இணையதளம் மூலம் வேட்பாளர்கள் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள் வதில் சிரமம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x