Last Updated : 23 Feb, 2022 10:14 AM

 

Published : 23 Feb 2022 10:14 AM
Last Updated : 23 Feb 2022 10:14 AM

திமுகவில் இணைந்த 10 சுயேச்சைகள்: அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை தன்வசமாக்கியது திமுக

படம்: அரியலூரில் திமுகவில் இணைந்த சுயேச்சை வேட்பாளர்களுடன் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் 10 பேர் திமுகவில் இணைந்ததால், அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை திமுக தன் வசமாக்கியுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு திமுக, அதிமுக இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் அரியலூரில் 3 சுயேச்சைகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நேற்று (பிப் 22) இரவு திமுகவில் இணைந்தனர்.

இதனால் அரியலூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது. இவர்கள் 3 பேரும் திமுகவில் சீட் தராததால் சுயேச்சையாக நின்று வெற்றிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் விசிகவும் வெற்றி பெற்ற நிலையில், சுயேச்சை ஒருவர் திமுக வில் நேற்று இணைந்ததால் ஜெயங்கொண்டம் நகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.

உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் திமுகவும்,விசிக, காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 சுயேச்சைகள் நேற்று திமுவில் இணைந்தனர்.

அதேபோல் வரதராஜன்பேட்டையில் உள்ள 15 வார்டுகளில் 7 திமுக, 8 சுயேச்சை வெற்றி பெற்ற நிலையில் 3 சுயேச்சைகள் திமுகவில் இணைந்தனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 2 பேரூராட்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x