Published : 13 Apr 2016 12:38 PM
Last Updated : 13 Apr 2016 12:38 PM

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஏப்.18-ல் தீர்ப்பு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 18-ம் தேதி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x