Published : 22 Feb 2022 06:09 AM
Last Updated : 22 Feb 2022 06:09 AM

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

23-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைபெய்யக் கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x