Published : 22 Apr 2016 08:16 AM
Last Updated : 22 Apr 2016 08:16 AM

மலேசிய உணவுத் திருவிழா: சென்னையில் இன்று தொடங்குகிறது

மலேசியாவின் சுவைமிகுந்த உணவு வகைகளை ருசிக்க வகை செய்யும் மலேசிய உணவுத் திருவிழா சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 வாரங்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மலேசிய துணை தூதர் அகமது பஜராஷாம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மலேசிய உணவு வகைகளை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தும் வகையில் மலேசியா உண வுத் திருவிழா நடத்தப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ரெயின் ட்ரீ ஹோட் டலில் 22-ம் தேதி (இன்று) தொடங்கி மே 8-ம் தேதி வரை 2 வார காலம் இந்த உணவுத் திருவிழா நடைபெறும். மலேசிய சுற்றுலா துறையும் ரெயின் ட்ரீ ஹோட்டல் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் தினமும் இரவு 7 மணி முதல் 11 மணி வரை மலேசிய உணவு வகைகளை சுவைத்து மகிழலாம்.

இதில் உலகப்புகழ்பெற்ற மலேசியாவின் சமையல் கலைஞரான அஸ்ரி ரகுமான் மலேசிய உணவு பதார்த்தங்களை தயாரித்து வழங்குகிறார். மலேசி யாவில் புகழ்பெற்ற சர்கோயேடா (அரிசி நூடுல்ஸ்) ஹோக்கின்மி (முட்டை நூடுல்ஸ்), ரெண்டாங் மசாஸ் ஹிதாம், பிரைடு நூடுல்ஸ், சிக்கன் ரைஸ் உட்பட விதவிதமான உணவு பதார்த்தங்களையும் பல்வேறு வகையான சூப்புகளையும் இந்த உணவுத் திருவிழாவில் உண்டு மகிழலாம்.

இவ்வாறு அகமது பஜராஷாம் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்கள் வழங்கும் சேவையை மலேசிய அரசு மேம்படுத்தி வருகிறது. மின்னணு முறையில் மாணவர் விசா வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன்மூலம், விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் விசா பெற முடியும்” என்றார்.

முன்னதாக, ரெயின் ட்ரீ ஹோட்டல் பொது மேலாளர் ராகேஷ், மலேசிய உணவு திருவிழா நடத்தப்படுவது குறித்து அறிமுகவுரை ஆற்றினார். மலேசிய சமையல் கலைஞர் அஸ்ரி, உணவு தயாரிப்புத் துறையில் தனது 30 ஆண்டு கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x