சோதனையில் ரூ.2 கோடி நகை, மதுபானம் பறிமுதல்

சோதனையில் ரூ.2 கோடி நகை, மதுபானம் பறிமுதல்
Updated on
1 min read

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பறக்கும்படையினர் கடந்த 16-ம் தேதி நடத்திய சோதனையில் கடலூரில் ரூ.80 லட்சத்து 24 ஆயிரத்து 543 மதிப்புள்ள 952.43 கிராம் தங்க நகைகள், 18-ம் தேதி கடலூரில் ரூ.3 கோடியே 25 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை, பறக்கும்படையினரால் ரூ.13 கோடியே 60 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் கடந்த 16-ம் தேதி ரூ.16 லட்சம் மதிப்பு பெயின்ட் வகைகள், 17-ம் தேதி ரூ.ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பு மதுவகைகள், ரூ.3.48 லட்சம் மதிப்பு வெளிமாநில லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை இக்குழுவினரால் ரூ.15 கோடியே 34 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in