Published : 26 Apr 2016 09:14 AM
Last Updated : 26 Apr 2016 09:14 AM
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்து கோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா வழங்க ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்ட உயர்நிலை குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இது அப்பட்டமாக இந்துக்களின் கோயில்களை சூறையாடி, அழிப்பதற்கான சதி. அதே நேரத்தில் வக்ஃபு வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, மசூதியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்து கோயில் சொத்துகளை அழிப்பதற்கும், மசூதி சொத்தானால் பாதுகாக்கவும் திமுக உறுதி பூண்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இந்து விரோத திமுகவை இந்துக்கள் வீழ்த்தி வேண்டும். இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT