Published : 09 Apr 2016 09:05 AM
Last Updated : 09 Apr 2016 09:05 AM
செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதுதான் முதல் வேலை. கடன் தொல்லை தாங்காமல் இதுவரை 2,150 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தொகுதிக்கு 5 இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் புதுக் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.
திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைத்து தவறு செய்து விட்டோம். அரசியல் சூறாவளியில் திராவிட கட்சிகள் காணாமல் போகும். மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகிறது. நீண்டநாள் கனவு நிறைவேற போகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT